Tuesday 22 July 2014

1.) Welcome to my new world...!

அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்...!

          இன்று நாம் வசிக்கும் இவ்வுலகில், நம் அறிவுக்கு எட்டாத எத்தனையோ விஷயங்களுள், எனது பார்வையில் கோர்வையாக அகப்பட்ட சில ஆச்சர்யமான விஷயங்களை, எனது நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.

          நான், இனி வரப்போகும் பதிவுகளில் பகிரும் விஷயங்கள் ஏற்பதற்கு சற்று கடினமானதாக இருந்தாலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், எனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் எடுத்த ஆராய்ச்சி முடிவுகளையே, 'இப்படியும் இருக்கலாம்' என்கிற நோக்கோடு, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பிழை இருப்பின் மன்னிக்கவும். தங்களின் பகுத்தறிவைக் கழட்டி வைக்காமலேயே என்னுடன் பயணிக்கலாம். தங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

         நம் நாட்டிற்கு 12 மணிக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் போல, எனக்கும் கூட இன்றிரவு 12 மணிக்குத்தான் எழுத்துச் சுதந்திரம் கிடைத்தது.(அதற்கு உதவிய நண்பன் 'தையரசன்'-க்கு நன்றி..!)

         எனக்குத் தெரியாத என்னை,எனக்கு அடையாளம் காட்டிய எனது மாமா திரு.செந்தூர் நாதன் அவர்களுக்கும், என்னோடு பல தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்ட, பகிர்ந்துகொள்ளும் திரு.செந்தில் குமரன், திருமதி.கல்யாணி (எனது சித்தி), லின்ஷா, மலிஹா புஷ்ரா, கோமதிப்பிரியா, விஜயராஜன், திரு.ஸ்ரீனிவாச ராகவன்,  திரு.S.ராஜசேகரன், R.அருண் பாண்டியன், மேலும் இதில் விடுபட்ட எனது நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும், அத்துடன்  என் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம். (லிஸ்ட் கொஞ்சம் பெருசுதான்...! ஆனால், தமிழனல்லவா...அதுதான் அனைவருக்கும் மறக்காமல் நன்றி சொல்லிவிட்டேன்...!)

        நான் இப்படி ஒரு பதிவுகளை உள்ளிட தூண்டுகோலாய் இருந்த Erich Von Daniken, Stephen William Hawking, Raj Shiva, Sujatha, Madhan (இந்த லிஸ்டும் பெருசா போகும்...! அதனால) போன்ற அனைவருக்கும் நன்றி...!

       எதிர்பார்ப்புகளுடன் காத்திருங்கள்...!
       நிச்சயம் ஏமாறமாட்டீர்கள்...!!!

ஆச்சர்யமான தகவல்களுடன் அடுத்த பதிவில் (புதன் கிழமை) சந்திப்போம்...!
அதுவரை நன்றிகளுடன்,
                     - அயலான்.

2 comments: